ஊரோடு ஒற்றுமையாய் வாழ்…
ஊன் இல்லாதோருக்கு கொடுத்துதவு…..
ஊனம் என்பது உடலில் இல்லை …..
ஊத்தை கொண்ட உள்ளம் இருப்பதே ….
ஊர்போற்ற வாழ்ந்து காட்டு ….!!!
ஊரூராய் நல்லவை செயப்பழக்கு…..
ஊட்டி வளர்த்த உறவுகளை மறவாதே …..
ஊதாரியாய் செலவு செய்யாதே …..
ஊர்வனவற்றை சித்திரைவதை செய்யாதே ….
ஊகத்தில் பேசிப்பழகாதே ……!!!
ஊக்கத்துக்கு எப்போது ஊக்கம் கொடு ….
ஊதியத்தை இயன்றவரை பெற்றுவிடு ….
ஊழியம் செய்வதை உயர்வாய் நினை ….
ஊழி அழியும்வரை உயர்வாய் வாழ்வாய் ….
ஊர்ச்சிதம் ஆகும் உன் பிறப்பின் உன்னதம் ….!!!
ஊர் கண் விழிக்கமுன் துயில் எழு ….
ஊற்றுபோல் பெருக்கிவிடு அறிவை …..
ஊர் உலகம் தேடிவரும் உன்னடியில் ….
ஊன்றிவிடு உன் உழைப்பை உலகத்துக்கு ….
ஊன்று கோளாய் இரு இளையோருக்கு…!
@
கவிப்புயல்
இனியவன்